இந்திய பால் (கலப்பட) புரட்சி

பச்சை குழந்தை முதல் சாகபோகும் கிழவியின் கடைசி உணவு வரை அத்தியாவசிய உணவு பால்..

சில காலமாக டெல்லி மும்பை போன்ற பெருநகரங்களில் இருந்த பால் கலப்படம் இன்று ஈரோடு வரை மலிந்துவிட்டது. ஈரோடு பெயருக்குத்தான் மாநகராட்சி என்றாலும் எந்த வீட்டின் மாடியில் ஏறி பார்த்தாலும் அருகிலேயே கிராமம்தான் என்பது தெரியும். ஈரோட்டை ஏன் பெரியதாக சொல்கிறேன் என்றால் பால் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாவட்டம்,மாவட்டம்,மாநிலம், வெளிநாடு என்று இம்மாவட்டத்தின் பால் பொருட்கள் செல்கின்றன. நேற்று ஈரோட்டில் இருந்து பெங்களூரு சென்ற 5 டன் கலப்பட பாலை பறிமுதல் செய்துள்ளனர். இதற்கு காரணமான பால் பண்ணையாளர் ஏற்கனவே கலப்பட குற்றத்திற்கு ஆளானவர்.

பாலில் கலக்கப்படும் பொருட்கள் என்ன தெரியுமா..?? விவசாயத்திற்கு பயன்படுத்தும் யூரியா (யூரிக் அமிலம்/நாப்தா/அம்மோனியா/சயனைடு பார்முலேசன்), சோடா உப்பு, சலவை சோப்பு தூள் முதலியவை. இப்போதுள்ள மாடுகளே (ஹைபிரிட் என்று) மரபணு மாற்றப்பட்டு நோய் கூறுகள் உள்ள பாலை கொடுக்கும் நிலையில் இது வேறு.

இன்று பெருநகரங்களில் வரும் பால் பொருட்களில் 70% கலப்பட பால்தான் என்பதை உணவு கலப்பட தணிக்கை துறையே சொல்கிறது. இனி தமிழக மாவட்டங்களும் இதற்க்கு விதிவிலக்கல்ல.

சீனாவில் 2008ல் பால் கலப்படத்தால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உட்பட 3 லட்சம் மக்கள் பாதிக்கபட்டனர். பலர் உயிர் இழந்தனர். சீன அரசு குற்றவாளிகளை தூக்கில் போட்டது. இந்தியாவிலும் அத்தனை உயிர்களை காவு சீக்கிரம் காவு கொடுப்போம் என்று நினைக்கிறேன். அதற்கு முன் அதிகாரிகள்/மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுத்தால் நலம்.
                                                          இணையதள செய்தியாளர் : சசிகுமார்