கைப்பந்து போட்டி : திரூவாரூர், ஈரோடு அணிகள் வெற்றி


        கன்னியாகுமரியில் நடந்த மாநில அளவிலான இளையோர் கைப்பந்து போட்டியில் ஆடவர் பிரிவில் திருவாரூர் அணியும், மகளிர் பிரிவில் ஈரோடு அணியும் கோப்பைகளை வென்றன.
கடந்த 26-ஆம் தேதி தொடங்கி, நான்கு நாட்கள் நடந்த இந்த தொடரின் ஆடவர் பிரிவில் 20 அணிகளும், மகளிர் பிரிவில் 19 அணிகளும் பங்கேற்றன. ஆடவர் இறுதி போட்டியில் திருவாரூர் அணியை எதிர்த்து விழுப்புரம் அணி களமிறங்கியது. இதில் 25-18, 25-19, 25-12 என்ற புள்ளிகள் கணக்கில் திருவாரூர் அணி வெற்றிபெற்றது.
இதேபோல் மகளிர் போட்டியில் ஈரோடு அணியுடன் மதுரை அணி பலப்பரீச்சை நடத்தியது. இந்த போட்டியில் ஈரோடு அணி 25-15, 25-16, 25-22 என்ற புள்ளிகள் கணக்கில் போராடி வென்றது. இந்த தொடரில் வென்றதன் மூலம் திருவாரூர் மற்றும் ஈரோடு அணிகள், வரும் 19-ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற தகுதிபெற்ற
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்