ஈரோடு அருகே பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் 5 பேர் பலி


    ஈரோடு அருகே அரசு பேருந்து மீது சரக்கு வேன் மோதிய விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர்.
     கோவையில் இருந்து சேலம் நோக்கி அரசு பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. சித்தோடு அருகே தனியார் கல்லூரி ஒன்றின் சந்திப்பில் பேருந்து மீது எதிரே வந்த சரக்கு வேன் மோதியது. இதில் பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில், சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்த 15 பேர், ஈரோடு மற்றும் பவானியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் இருவர், ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

                                                                 -பசுமை நாயகன்