திருமாவளவனுடன் சமாதானம் இல்லை: ராமதாஸ் திட்டவட்டம்


      விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சமாதானப் பேச்சுக்கே இடமில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற அனைத்து சமுதாய பேரியக்க ஆலோசனைக் கூட்டத்தில் ராமதாஸ் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தல் பேசிய ராமதாஸ், சாதியை ஒழிக்க கலப்புத் திருமணங்கள் ஒன்றே வழி என்று தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இத்தகைய பிரசாரங்களை குறிப்பிட்ட கட்சியினர் மட்டுமே செய்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
                                -இணைய செய்தியாளர் - s.குருஜி