ஈரோட்டில் முதலீட்டாளர்களிடம் 9 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரின்
பேரில் குயின் ஈமு நிறுவனத்தின் பொது மேலாளர் உள்பட 2 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த பொதுமேலாளர் கார்த்திகேயன் மற்றும்
மண்டல மேலாளர் வினோத் ஆகியோரை பெருந்துறை அருகே போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த குயின் ஈமு பார்ம்ஸ்
என்ற நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் ஒன்றரை லட்சம் ரூபாய் மூதலீடு
செய்பவர்களுக்கு மாதம் தோறும் 7 ஆயிரம் ரூபாய் வழங்குவதோடு வருடம் ஒரு முறை
15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதாகவும் இந்த நிறுவனம்
அறிவித்திருந்தது.
இதனையடுத்து முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக
பராமரிப்பு தொகை வழங்கவில்லை என கூறி 363 பேர் மாவட்ட பொருளாதார
குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர்.